search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் முயற்சி வெற்றி பெறும்- நாஞ்சில் சம்பத்
    X

    தினகரன் முயற்சி வெற்றி பெறும்- நாஞ்சில் சம்பத்

    தன் பக்கம் இருக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் தினகரன் வெற்றி பெறுவார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். #NanjilSampath #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறார். அவரது நம்பிக்கை நிறைவேற எனது வாழ்த்துக்கள். 18 பேரையும் தற்காத்து கொள்ளும் கடமை தினகரனுக்கு உள்ளது.

    ஏனெனில் அவர்களில் 7 பேர் தங்கள் பக்கம் இருப்பதாக பொறுப்பில் இருக்கும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியது பதிவாகியிருக்கிறது. எனவே கோடிக்கணக்கில் பேரம் பேசும் செயல்களை செய்வதற்கு ஆளும் கட்சியினர் தயங்க மாட்டார்கள்.

    இந்த காரணத்தால் தன் பக்கம் இருக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்து கொள்ள தினகரன் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளது தவறில்லை. இந்த முயற்சியில் தினகரன் வெற்றி பெறுவார்.


    தமிழக முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டவுடனேயே அவர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    சபரிமலை போராட்டம் திணிக்கப்பட்ட போராட்டம். இதை வைத்துக் கொண்டு கரைசேர முடியாத சில கட்சிகள் மலிவான அரசியலை நடத்துவது தான் கேரள அரசியலில் நடக்கிற தப்பாட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார். #NanjilSampath #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    Next Story
    ×