என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொடக்குறிச்சி அருகே விஷம் குடித்து கூட்டுறவு சங்க பெண் மேலாளர் தற்கொலை
Byமாலை மலர்23 Oct 2018 5:57 PM GMT (Updated: 23 Oct 2018 5:57 PM GMT)
மொடக்குறிச்சி அருகே விஷம் குடித்து கூட்டுறவு சங்க பெண் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). இவர் பேரூராட்சி செயல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இவருடைய மனைவி சாந்தி (54). இவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு விஜயசத்யராஜ் (34) என்கிற மகன் உள்ளார். இவர் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக சாந்திக்கு உடல் நலம் சரியில்லை என கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகவில்லை. இதனால் சாந்தி மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சண்முகம் நேற்று முன்தினம் காலை தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தி மட்டும் தனியாக இருந்தார். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாததால் மனம் உடைந்து காணப்பட்ட சாந்தி ‘இனி வாழ்வதை விட சாவதே மேல்’ என்ற முடிவுக்கு வந்தார். இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்போன் மூலம் சண்முகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சண்முகம் பதற்றத்துடன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி சாந்தி இறந்து கிடந்ததை கண்டு அவர் கதறி அழுதார்.
இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). இவர் பேரூராட்சி செயல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இவருடைய மனைவி சாந்தி (54). இவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு விஜயசத்யராஜ் (34) என்கிற மகன் உள்ளார். இவர் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக சாந்திக்கு உடல் நலம் சரியில்லை என கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகவில்லை. இதனால் சாந்தி மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சண்முகம் நேற்று முன்தினம் காலை தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தி மட்டும் தனியாக இருந்தார். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாததால் மனம் உடைந்து காணப்பட்ட சாந்தி ‘இனி வாழ்வதை விட சாவதே மேல்’ என்ற முடிவுக்கு வந்தார். இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்போன் மூலம் சண்முகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சண்முகம் பதற்றத்துடன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி சாந்தி இறந்து கிடந்ததை கண்டு அவர் கதறி அழுதார்.
இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X