search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் சாராயம் விற்ற 9 பேர் கைது
    X

    மயிலாடுதுறையில் சாராயம் விற்ற 9 பேர் கைது

    மயிலாடுதுறையில் சாராயம் விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அரிவளூர் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே சாராயம் விற்பனை நடப்பதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சாராயம் விற்ற அரிவளூர் நடுத்தெருவை சேர்ந்த கணபதி மகன் முரசொலிமாறன் (வயது36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கோடங்குடி சோலையாம்பட்டினம் கிராமம் கடலாழி ஆற்றங்கரையோரம் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (31) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    இதேபோல் பாலையூர், குத்தாலம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட மேலஅய்யனார்குடியை சேர்ந்த அருள்தாஸ் (33), திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரியதுளார் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் (58), எழுமகளூரை சேர்ந்த விஜயலட்சுமி (55), தரங்கம்பாடி திருவிளையாட்டம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ராஜாங்கம் (27), அறுபத்துமூவர் பேட்டையை சேர்ந்த ஜீவா (25), அசிக்காட்டை சேர்ந்த வாசுகி (40), மல்லியம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சாராயம் விற்றது தொடர்பாக மேலும் 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×