search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரத்தில் நாட்டு வெடி வெடித்து பெண் உள்பட மூவர் பலி
    X

    காஞ்சிபுரத்தில் நாட்டு வெடி வெடித்து பெண் உள்பட மூவர் பலி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டில் வைத்து இருந்த நாட்டு வெடி வெடித்ததில் பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #Kanchipuram #Diwali
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் நாகலு தெருவில் இருக்கும் சைரா பானு என்பவர் தீபாவளி சீட்டுபோட்டு, பட்டாசு விநியோகம் செய்து வந்துள்ளார். அதற்கென அவரது வீட்டில் வாங்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்ததில், சைரா பானுவின் மகன்கள் உட்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    வெடி விபத்தில் வீடு இடிந்து தரை மட்டம் ஆனது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    பட்டாசுகளை முறையான அனுமதி பெற்றே விற்க வேண்டும் என உத்தரவிட்டும் இதுபோன்று சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிகளில் வைத்திருந்ததே இந்த தீ விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. #Kanchipuram #Diwali
    Next Story
    ×