search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து வியாபாரி பலி
    X

    திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து வியாபாரி பலி

    திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேடசந்தூர்:

    சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் மாதவன் மகன் முரளி கிருஷ்ணன் (வயது34). வெள்ளி பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு சப்ளை செய்து வந்தார். மதுரையிலும் பொருட்களை கொடுத்து விட்டு வசூல் செய்வது வழக்கம்.

    அதன்படி மதுரைக்கு சென்று பணம் வசூலித்த முரளிகிருஷ்ணன் காரில் சேலம் நோக்கி 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் அருகே வேடசந்தூர் விருதலைப்பட்டி பிரிவு தனியார் மில் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.

    சாலையோரத்தில் இருந்த எல்லை கல்லில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த முரளிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×