search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து கைதி தப்பி ஓட்டம்
    X

    வத்தலக்குண்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து கைதி தப்பி ஓட்டம்

    வத்தலக்குண்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெரும்பாறை:

    தேனியை சேர்ந்தவர் பொன்ராஜ்(வயது47). இவர் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திருடி வந்தார். தாண்டிக்குடி போலீசார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    நேற்று கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் பாண்டி, சங்கீதாமணி ஆகியோர் அழைத்து வந்திருந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வத்தலக்குண்டு வந்தபோது பொன்ராஜ் தனது மனைவியை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.

    அதன்படி போலீசாரிடமிருந்த செல்போனை வாங்கி தனது மனைவிக்கு போன் செய்தார். சிறிதுநேரத்தில் தனது மனைவி வர உள்ளதாகவும், அவரை பார்த்துவிட்டு செல்லலாம் என வத்தலக்குண்டு பஸ்நிலையம் அருகே காத்திருந்தனர். அப்போது அவருக்கு கைவிலங்கு மாட்டப்படவில்லை.

    திடீரென போலீசார் கண்ணில் மண்ணைதூவிவிட்டு பொன்ராஜ் மறைந்துவிட்டார். அக்கம்பக்கம் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் தப்பி ஓடிய பொன்ராஜை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×