என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்
Byமாலை மலர்23 Oct 2018 7:26 AM GMT (Updated: 23 Oct 2018 7:26 AM GMT)
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 3 அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 4 பேர் டெங்குக்கு பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள், மற்றும் டெங்குவை கண்டுபிடிக்கும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாக ஒரு மருத்துவர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுக்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் 20 பெண்களும், 8 ஆண்களும், 12 குழந்தைகளும் மொத்தம் 40 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றனர்.
இதில் தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவர் அல்ரோஸ் (வயது 18), கும்பகோணத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தாமஸ் (40) மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த ராஜா (30) ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தஞ்சையில் டெங்குவால் 3 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 4 பேர் டெங்குக்கு பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள், மற்றும் டெங்குவை கண்டுபிடிக்கும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாக ஒரு மருத்துவர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுக்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் 20 பெண்களும், 8 ஆண்களும், 12 குழந்தைகளும் மொத்தம் 40 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றனர்.
இதில் தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவர் அல்ரோஸ் (வயது 18), கும்பகோணத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தாமஸ் (40) மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த ராஜா (30) ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தஞ்சையில் டெங்குவால் 3 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X