search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எதிராக இருந்தாலும் அரசுக்கு ஆபத்து வராது- சரத்குமார்
    X

    18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எதிராக இருந்தாலும் அரசுக்கு ஆபத்து வராது- சரத்குமார்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு எதிராக வந்தாலும் கூட ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என்று சரத்குமார் கூறினார். #MLAsDisqualificationCase #Sarathkumar
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் ஜனப்பன் சந்திரத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தொடர்ந்து கட்சி அலுவலகத்தை அதன் தலைவர் சரத்குமார் திறந்து வைத்தார்.

    காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக எடுக்க வேண்டும், அமைச்சர் விஜயபாஸ்கர் இதில் துரிதமாக செயல்பட வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை திசை திருப்ப பா.ஜ.க. சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து இருக்கலாம். கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் விலை உயர்வை திசை திருப்பும் உள் நோக்கம் இதில் இருக்கலாம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு எதிராக வந்தாலும் கூட ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை.

    பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தில் ஏற்கனவே அ.தி.மு.க.வினர் பேசி முடித்து வைத்திருப்பார்கள்.


    மோடி இந்தியாவின் பிரதமரா என கேள்வி உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுத்துள்ளார். தொழில் அதிபர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி அணுகூலமாக செயல்படுகிறார்.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தல் என்றாலும் அனைத்து தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும்.

    மீ டூ குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும்போது குறைந்தபட்ச ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பெண்களிடம் தவறாக நடக்கக்கூடாது. தற்போது மீ டூ விவகாரத்தால் அச்சம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை. அதனால் அதன் செயல்பாடுகள் குறித்து தம்மால் கருத்து கூற முடியாது.

    சபரிமலையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டது கண்டிக்கதக்கது. செய்தியாளர்கள் இருந்தால் தான் என்ன நடைபெறுகிறது என வெளி உலகத்திற்கு தெரிய வரும்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார்.

    விழாவில் மாநில கவுரவ ஆலோசகர் சந்திரபோஸ், துனைப்பொதுசெயலாளர் சேவியர், பொருளாளர் சுந்தரேசன், இளைஞரணி இணை செயலாளர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் கிரிபாபு, தொகுதி செயலாளர் பாபு, சித்தூர் சுரேஷ்ரெட்டி, வீரராகவலூ, தேசப்பா, மன்னார் நூர் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். #MLAsDisqualificationCase  #Sarathkumar
    Next Story
    ×