search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி காண்டிராக்டர் பலி
    X

    நல்லம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி காண்டிராக்டர் பலி

    மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய விபத்தில் காண்டிராக்டர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது52). இவர் பெங்களூரில் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கான காண்டிராக்டு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கு 1 மகளும், 2 மகனும் உள்ளனர். வருகிற 11-ந்தேதி அன்று அவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதற்காக நாகராஜ் பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வந்தார். 

    நேற்று மாலை வீட்டில் இருந்து நாகராஜ் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள புறவடை பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நாகராஜ் உயிரிழந்தார். 

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×