search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரும்பாலை அருகே கட்டிட மேஸ்திரி படுகொலை
    X

    பெரும்பாலை அருகே கட்டிட மேஸ்திரி படுகொலை

    பெரும்பாலை அருகே கட்டிட மேஸ்திரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 45), கட்டிட மேஸ்திரி. நேற்று இரவு 11.30 மணிக்கு இவர் குடிபோதையில் இருந்தார். அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவர் வீட்டுக்கு சென்ற இவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

    அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கட்டையை எடுத்து முனியப்பன் தலையில் சுப்பிரமணி தாக்கினார். சம்பவ இடத்திலேயே முனியப்பன் இறந்து போனார்.

    இந்த கொலை குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட முனியப்பனுக்கு சங்கோதி என்ற மனைவியும், அன்பரசு என்ற மகனும், அஞ்சலிதேவி என்ற மகளும் உள்ளனர்.
    Next Story
    ×