search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகலூர் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
    X

    பாகலூர் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

    குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள நரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரதியான்(32). இவருக்கும், ஓசூர் காரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா என்பவர் மகள் நாகவேணி(29) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 

    இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிகிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையெடுத்து கடந்த 20-ம் தேதி காலையில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த நாகவேணி, பாகலூர்-பேரிகை ரோட்டில் உள்ள சுப்பிரமணி விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவலறிந்த பாகலூர் போலீசார், நாகவேணியின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×