search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடி அருகே வர்த்தக சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு- விவசாயி கைது
    X

    சாயல்குடி அருகே வர்த்தக சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு- விவசாயி கைது

    வர்த்தக சங்க தலைவருக்கு முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள எஸ்.தரைக்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் முகமது அபுபக்கர் (வயது52). சாயல்குடி வர்த்தக சங்க தலைவராகவும், தரைக்குடி ஜமாத் தலைவராகவும் உள்ளார்.

    இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திக்குவிஜயன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முகமது அபுபக்கர், எஸ்.தரைக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாயல்குடிக்கு புறப்பட்டார்.

    ஆர்.சி.புரம் பகுதியில் அவர் வந்தபோது திக்கு விஜயனின் மகன்கள் உமயவேலாயுதம், தங்கபாண்டி ஆகியோர் வழிமறித்தனர். அவர்கள் முகமது அபுபக்கரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து சாயல்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோக்கின் ஜெரி விசாரணை நடத்தி திக்குவிஜயன் மகன்கள் உமயவேலாயுதம், தங்கப்பாண்டி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் உமய வேலாயுதம் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×