search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்தூண்கள் மாயமானது பற்றி ரன்வீர்ஷாவிடம் விசாரிக்கப்படும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேல்
    X

    கற்தூண்கள் மாயமானது பற்றி ரன்வீர்ஷாவிடம் விசாரிக்கப்படும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேல்

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். #IdolSmuggling #PonManickavel
    திருவாருர்:

    திருவாருர் தியாகராஜர் கோவிலில் சிலைகள் பாதுகாப்பகத்தில் நடை பெறும் ஆய்வை பார்வையிட சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேற்று இரவு வந்தார்.

    சிலைகள் ஆய்வு பணிகள் விவரம் பற்றி தொல்லியல் துறையினர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 395 சிலைகளும் திருவாரூரில் 80 சிலைகளும் ஆய்வு செய்யபட்டுள்ளது. அனைத்து சிலைகளும் பரிசோதனை செய்யப்படும் வரை இந்த ஆய்வு தொடரும்.



    இதுவரை கடத்தபட்ட 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கபட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ரூ.400 மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும். விரைவில் திருவாரூரில் கற் சிலைகளும் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolSmuggling #PonManickavel
    Next Story
    ×