என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் 4 வழிச்சாலையில் அடுத்தடுத்து விபத்து: 2 பேர் உடல் நசுங்கி பலி
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கே.வெள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 60). இவர், சைக்கிளில் 4 வழிச்சாலையை கடந்த போது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். இரவு நேரத்தில் விபத்து நடந்ததால் இதனை யாரும் கவனிக்கவில்லை.
பலியான நாகலிங்கத்தின் உடல் அங்கேயே கிடந்த நிலையில், வேறு சில வாகனங்களும் ஏறிச் சென்றன. இதனால் உடல் சிதைந்து விட்டது.
கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள பரம்புபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
4 வழிச்சாலையில் ராஜேந்திரன் நடந்து சென்ற போது ராஜபாளையத்தில் இருந்து திருப்புவனம் சென்ற தனியார் பஸ் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்