search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    X

    கோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    கோவில் வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கல்யாண சுந்தரம் என்பவர் கோவில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், உரிம காலம் முடிந்த கடைகளை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கந்தசிஷ்டி கவச விழாவுக்கு என திருச்செந்தூர் கோவிலில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனவும், கோவில்களின் சொத்து விவரங்களை அந்தந்த கோவில்களில் விளம்பர பலகைபோல் வைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. #MaduraiHC
    Next Story
    ×