search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக திருச்சி விமானநிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். #NorthEastMonsoon #ADMK #TNMinister #Udhayakumar
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இதுகுறித்து 32 வருவாய் மாவட்டங்களிலும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கிறது.

    அந்த இடங்களில் அதிகப்படியான மழையோ, வெள்ளமோ ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள குழுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    முதல்வர் தலைமையில் நான்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. நிர்வாக காரணங்களுக்காக ‘ரெட் அலர்ட்’ போன்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அது தேவையில்லை என்றால் விலக்கி கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NorthEastMonsoon #ADMK #TNMinister #Udhayakumar
    Next Story
    ×