என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி - வாலிபர் கைது
Byமாலை மலர்22 Oct 2018 10:24 AM GMT (Updated: 22 Oct 2018 10:24 AM GMT)
ஆம்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த உமராபாத் கடாம்பூரை சேர்ந்தவர் அமீர் பாஷா (வயது 57). ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் நேற்று மாலை கெங்காபுரம் பகுதியில் உள்ள நண்பரின் பீடா கடைக்கு சென்றார்.
அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் அமீர்பாஷாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், 1000 ரூபாயை பறித்தார்.
மேலும் 2 பேரிடம் மிரட்டி பணம் வழிப்பறி செய்தார். இதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசுக்கு புகார் சென்றது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், ஆம்பூர் பி.கஸ்பா குமரேசன் தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் பிரபுகுமார் (28) என் பது தெரியவந்தது.
பிரபுகுமாரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X