search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும்- திருமாவளவன் பேட்டி
    X

    சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும்- திருமாவளவன் பேட்டி

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #sabarimalatemple

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மானம்பாடி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 500 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி அன்று திருச்சியில் ‘‘தேசம் காப்போம்’’ என்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அடுத்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் 17-ந் தேதிக்குள் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கப்படும்.


    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து, பாம்பும் சாகக்கூடாது, தடியும் நோகக்கூடாது என்ற அடிப்படையில் உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும். கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் ஐதீகமும், பாரம்பரியமும் பாதிக்காது. அது பெண்களுக்கான ஜனநாயக உரிமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் தமிழருவி, மண்டல செயலாளர் விவேகானந்தன், கும்பகோணம் சட்டசபை தொகுதி செயலாளர் முல்லை வளவன், வடக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி தமிழ், விவசாய அணஇ பொருளாளர் வெண்மணி, தஞ்சை மைய மாவட்ட செயலாளர் சொக்கா. ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumavalavan #sabarimalatemple

    Next Story
    ×