search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேடசந்தூர் அருகே வேன் கவிழ்ந்து 16 பேர் நசுங்கினர்
    X

    வேடசந்தூர் அருகே வேன் கவிழ்ந்து 16 பேர் நசுங்கினர்

    வேடசந்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உடல் நசுங்கினர்.

    வேடசந்தூர்:

    சேலத்தை சேர்ந்த 3 குடும்பத்தினர் நெல்லைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஒரு வேனில் நெல்லை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று விட்டு சேலம் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. செண்டர் மீடியனை தாண்டி எதிர்புற சாலையில் ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணம் செய்த 16 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் மற்றும் கரூர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×