search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது கண்ணாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்களால் குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது - போலீஸ் கமி‌ஷனர் பேச்சு
    X

    3-வது கண்ணாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்களால் குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது - போலீஸ் கமி‌ஷனர் பேச்சு

    3-வது கண்ணாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்களால் குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது என்று போலீஸ் கமி‌ஷனர் கூறியுள்ளார்.

    போரூர்:

    போரூர் மங்களாநகர் நலவாழ்வு சங்கம் சார்பில் மங்களா நகரில் மொத்தம் உள்ள 16 தெருக்களிலும் புதிதாக 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இதற்கான தொடக்க விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டிக்காராம், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கேமராக்களின் செயல் பாட்டினை கமி‌ஷனர் தொடங்கி வைத்தார்.

    வடசென்னை கூடுதல் ஆனையர் தினகரன், மேற்கு மண்டல இனை ஆணையர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகர்,மாநகராட்சி மண்டல உதவி கமி‌ஷனர் சசிகலா, இன்ஸ்பெக்டர்கள் சங்கரநாராயணன், சீத்தாராமன், மங்களா நகர் நலவாழ்வு சங்க தலைவர் நடராஜன் மற்றும் குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விழாவில் பேசியதாவது :-

    சென்னையில் நடைபெறும் பல்வேறு வகையான குற்றசம்பவங்களில் துப்பு துலக்க போலீசாருக்கு கண்காணிப்பு கேமரா பெரும் உதவியாக உள்ளது. அதன் மூலம் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடிகிறது. சமீபத்தில் கூட வளசரவாக்கம் பகுதியில் முதியவரிடம் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க கண்காணிப்பு கேமரா பெருமளவு உதவியாக இருந்தது.

    நாம் தூங்கினாலும் தூங்காமல் கண் விழித்து கண்காணிக்கும் மூன்றாவது கண்களாக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

    Next Story
    ×