search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்பாக்கம் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி
    X

    கல்பாக்கம் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி

    கல்பாக்கம் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ், சாப்ட்வேர் என்ஜினீயர். நேற்று மதியம் காரில் நண்பர் பிரவீனுடன் பாண்டிச்சேரி சென்றார். கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதியது.

    இதில் காரை ஓட்டிச் சென்ற ஹரீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரவீன் காயங்களுடன் உயிர் தப்பினார்.

    Next Story
    ×