search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 4 பேர் படுகாயம்
    X

    சாலையோரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 4 பேர் படுகாயம்

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரத்தில் நின்று இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர்.
    பனைக்குளம்:

    திருவண்ணாமலை மாவட்டம் போலூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் ஒன்றில் ராமேசுவரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.இந்த வேனை டிரைவர் சதீஷ் என்பவர் ஒட்டினார். நேற்று காலை மண்டபம் கடற்கரை பூங்கா அருகே வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசகாய சேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேனுக்குள் பழனி (வயது75), கலைச் செல்வி (35), சங்கரி (35), காயத்ரி (15) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து கிடந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மண்டபம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 
    Next Story
    ×