என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி
Byமாலை மலர்20 Oct 2018 4:59 PM GMT (Updated: 20 Oct 2018 4:59 PM GMT)
சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் தருண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராமேசுவரம்:
கீழக்கரை சிவகாமிபுரத்தில் குடியிருந்து வருபவர் காந்தி. இவருடைய மகன் தருண்(வயது18). இதே பகுதியில் குடியிருப்பவர் பாஸ்கரன் மகன் முனீசுவரன்(21). இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் முனீசுவரனின் அக்கா ராமேசுவரம் நடராஜபுரத்தில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக முனீசுவரன், தருண் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம் வந்தனர். பின்னர் இந்த பகுதியில் சுற்றிப்பார்த்து விட்டு கீழக்கரைக்கு திரும்பினர்.
இவர்கள் செம்மமடம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது தங்கச்சிமடத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தருண் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த முனீசுவரன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
பின்பு இறந்த தருணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து சிக்கலை சேர்ந்த வேன் டிரைவர் மயில்வாகனனை கைது செய்தனர்.
கீழக்கரை சிவகாமிபுரத்தில் குடியிருந்து வருபவர் காந்தி. இவருடைய மகன் தருண்(வயது18). இதே பகுதியில் குடியிருப்பவர் பாஸ்கரன் மகன் முனீசுவரன்(21). இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் முனீசுவரனின் அக்கா ராமேசுவரம் நடராஜபுரத்தில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக முனீசுவரன், தருண் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம் வந்தனர். பின்னர் இந்த பகுதியில் சுற்றிப்பார்த்து விட்டு கீழக்கரைக்கு திரும்பினர்.
இவர்கள் செம்மமடம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது தங்கச்சிமடத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தருண் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த முனீசுவரன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
பின்பு இறந்த தருணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து சிக்கலை சேர்ந்த வேன் டிரைவர் மயில்வாகனனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X