என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மனைவி இறந்த வேதனையில் விஷம் குடித்து கணவன் தற்கொலை
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகிமை தாஸ் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்யாமேரி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சத்யாமேரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகிமைதாஸ் கவலையடைந்தார். வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு போய்விட்டாரே என நினைத்து மனம் உடைந்து காணப்பட்டார்.
நேற்று மாலை மகிமை தாஸ் திடீரென வீட்டில் வைத்திருந்த விஷத்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை மகிமைதாஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ் பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்