என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதச்சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்களுக்கு சுயகட்டுப்பாடு தேவை - உயர்நீதிமன்றம்
Byமாலை மலர்20 Oct 2018 6:36 AM GMT (Updated: 20 Oct 2018 6:36 AM GMT)
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12-வது பீடாதிபதியாக யமுனாச்சாரியார் பொறுப்பேற்க தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #ChennaiHC
சென்னை:
திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 11-வது மடாதிபதி சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தை அடுத்து 12-வது மடாதிபதியாக யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலை வெங்கடவரதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரது மனுவில், 11-வது மடாதிபதி தான் இறப்பதற்கு முன்னால் அடுத்த மடாதிபதியாக 3 பேரை தேர்வு செய்து இருந்ததாக உயிலில் குறிப்பிட்டிருப்பதாகவும், அந்த மூவரில் இல்லாத யமுனாச்சாரியாரை நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யமுனாச்சாரியாரின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளித்துள்ளது. மேலும், மதச்சார்பற்ற நீதிமன்றம் மதச்சடங்குகளில் தலையிடுவதில் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #ChennaiHC
திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 11-வது மடாதிபதி சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தை அடுத்து 12-வது மடாதிபதியாக யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலை வெங்கடவரதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரது மனுவில், 11-வது மடாதிபதி தான் இறப்பதற்கு முன்னால் அடுத்த மடாதிபதியாக 3 பேரை தேர்வு செய்து இருந்ததாக உயிலில் குறிப்பிட்டிருப்பதாகவும், அந்த மூவரில் இல்லாத யமுனாச்சாரியாரை நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யமுனாச்சாரியாரின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளித்துள்ளது. மேலும், மதச்சார்பற்ற நீதிமன்றம் மதச்சடங்குகளில் தலையிடுவதில் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #ChennaiHC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X