என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் மகள் பிணத்துடன் 4 நாட்களாக வசித்த பெண்
Byமாலை மலர்19 Oct 2018 5:48 PM GMT (Updated: 19 Oct 2018 5:48 PM GMT)
தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டில் 4 நாட்களாக மகள் பிணத்துடன் வசித்து வந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளக்காடு:
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் குமாரசாமி நகர் குறுக்குத்தெரு முதல் தெருவை சேர்ந்தவர் ராஜா மணி (எ) கணேசன். இவரது மனைவி பத்மாவதி. இவருக்கு சபீதா (21) என்ற மகள் உள்ளார். ராஜாமணி இறந்து விட்டார். இதனால் பத்மாவதி தனது மகளுடன் வசித்து வந்தார். சபீதாவுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்தது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபீதா இறந்துவிட்டார். இறந்த சபீதா உடலை அடக்கம் செய்யாமல் அவரது தாய் பத்மாவதி உடல் அருகேயே இருந்துள்ளார். 4 நாட்களாக அந்த உடலை வீட்டிலேயே வைத்து அன்றாட வேலையை கவனித்து வந்தாராம். இதனிடையே இன்று காலை அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பத்மாவதியின் வீட்டை பார்த்தபோது அங்கு அழுகும் நிலையில் சபீதா உடல் கிடப்பதையும், பத்மாவதி அங்குள்ள ஒரு மூலையில் அமர்ந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சபீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில் பத்மாவதி மனநலம் பாதித்தவர் என்றும், மகள் இறந்ததை அறியாமல் அவர் மகள் உடலுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. சபீதா உடல் நல குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் முள்ளக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் குமாரசாமி நகர் குறுக்குத்தெரு முதல் தெருவை சேர்ந்தவர் ராஜா மணி (எ) கணேசன். இவரது மனைவி பத்மாவதி. இவருக்கு சபீதா (21) என்ற மகள் உள்ளார். ராஜாமணி இறந்து விட்டார். இதனால் பத்மாவதி தனது மகளுடன் வசித்து வந்தார். சபீதாவுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்தது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபீதா இறந்துவிட்டார். இறந்த சபீதா உடலை அடக்கம் செய்யாமல் அவரது தாய் பத்மாவதி உடல் அருகேயே இருந்துள்ளார். 4 நாட்களாக அந்த உடலை வீட்டிலேயே வைத்து அன்றாட வேலையை கவனித்து வந்தாராம். இதனிடையே இன்று காலை அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பத்மாவதியின் வீட்டை பார்த்தபோது அங்கு அழுகும் நிலையில் சபீதா உடல் கிடப்பதையும், பத்மாவதி அங்குள்ள ஒரு மூலையில் அமர்ந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சபீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில் பத்மாவதி மனநலம் பாதித்தவர் என்றும், மகள் இறந்ததை அறியாமல் அவர் மகள் உடலுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. சபீதா உடல் நல குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் முள்ளக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X