என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்தாமரைகுளம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்19 Oct 2018 5:34 PM GMT (Updated: 19 Oct 2018 5:34 PM GMT)
தென்தாமரைகுளம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பறித்து சென்று விட்டார்.
நாகர்கோவில்:
சாமிதோப்பை அடுத்த சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). இவர் மார்பிள் கற்கள் பதிக்கும் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ஜெயலட்சுமி (34). இவர் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு பகல் 12 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஒரு வாலிபர் வந்தார். ஜெயலட்சுமி அருகே சென்றதும் அந்த வாலிபர் அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் மூலம் அந்த கொள்ளையனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதேபோல் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் மரியராஜ். இவரது மனைவி அந்தோணியம்மாள் (78).
சம்பவத்தன்று அந்தோணியம்மாள் வெளியூர் சென்று விட்டு பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதை பயன்படுத்தி யாரோ அவரது கழுத்தில் கிடந்த 9 1/2 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர். அஞ்சுகிராமம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது தான் அவருக்கு அது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு பற்றி அஞ்சுகிராமம் போலீ சில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X