என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவட்டார் அருகே வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்19 Oct 2018 5:24 PM GMT (Updated: 19 Oct 2018 5:24 PM GMT)
திருவட்டார் அருகே வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
திருவட்டார்:
திருவட்டார் கண்ணணூர் உடையார்விளை பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மனைவி எலிசபத் (வயது 60). இவர்களது மருமகள் பிரசவத்திற்காக சுவாமியார் மடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் இவர்கள் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.
நேற்று காலை இவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டின் மாடி கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுபற்றி துப்புதுலக்க திருவட்டார் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவீந்திரன் தலைமையில் தனி போலீஸ்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கருங்கல்லை அடுத்த பூட்டேற்றி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் அலுவலக அறைக்கதவை யாரோ மர்ம மனிதர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை சிதறடித்து உள்ளனர். அதே சமயம் அங்கிருந்த பொருட்கள் எதுவும் திருட்டுப்போக வில்லை.
இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. கருங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X