search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் ஊட்டச்சத்து உணவுகள்- கலெக்டர் வழங்கினார்
    X

    ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் ஊட்டச்சத்து உணவுகள்- கலெக்டர் வழங்கினார்

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரூ.6 லட்சம் மதிப்பில் ஊட்டசத்து உணவுகளை வழங்கினார். #CollectorInnocentDivya
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு 1,876 குழந்தைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் ஊட்டசத்து உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலங்கள். பிறந்த குழந்தை 1 முதல் 5 வயது வரை தான் அதிக அளவு மூளை வளர்ச்சி அடைகிறது. அச்சமயத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகபடியான ஊட்டசத்து வழங்க வேண்டும். அப்பொழுது தான் ஊட்டசத்து குறைபாடு இல்லாத குழந்தைகளாக வளர்க்க முடியும்.

    மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதம் 100 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    போ‌ஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் தேசிய குடும்ப சுகாதாரம் மூலம் கணக்கெடுக்கப்பட்டதில் குள்ளத்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, எடைகுறைவு உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மேற்கண்ட குறைபாடுகளை குறைக்க வேண்டுமெனில் புரதசத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தவறாது உண்ண வேண்டும். இதன் அடிப்படையில் மாவட்டத்தில் 1,876 குழந்தைகளுக்கு மும்பையை சேர்ந்த இஷ்பிரவா என்ற அமைப்பின் மூலம் நெய், கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், மற்றும் பேரீச்சம்பழம் ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறி அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கோப £லகிருஷ்ணன் எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், இஷ்பிரவா அமைப்பின் தலைவர் தர்சன்ஷா, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #CollectorInnocentDivya
    Next Story
    ×