search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் அருகே 2 மகள்களுடன் இளம்பெண் மாயம்
    X

    ராஜபாளையம் அருகே 2 மகள்களுடன் இளம்பெண் மாயம்

    ராஜபாளையம் அருகே 2 மகள்களுடன் மாயமான இளம்பெண்னை போலீசார் தேடி வருகின்றன.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 40). ஆட்டோ டிரைவரான இவருக்கு செல்வராணி, கார்த்திக் தேவி(35), என 2 மனைவிகள் உள்ளனர். 2-வது மனைவிக்கு யாசினி(8), தாமரை செல்வி(7) என 2 மகள்.

    கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு கார்த்திகா தேவி, 2 மகள்களுடன் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    பதட்டம் அடைந்த ராஜ்குமார் மனைவி, 2 மகள்களை பல்வேறு இடங்களில் தேடினார்.

    இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வருகிறார்.

    Next Story
    ×