search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி
    X

    பூலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி

    பூலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது மகள் மாரிசெல்வம்(வயது30). இவர் திருமணமாகி கணவனை பிரிந்து வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இவர் அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். முடியாததால் ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய மாரிசெல்வத்தை பிணமாக மீட்டனர்.

    இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×