search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனியில் விபத்தில் கணவர் கண் முன் மனைவி-மகள் பலி
    X

    தேனியில் விபத்தில் கணவர் கண் முன் மனைவி-மகள் பலி

    தேனி அருகே விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி மற்றும் மகள் துடிதுடித்து உயிரிழந்தனர்.

    தேனி:

    நிலக்கோட்டை சாண்டலர்புரத்தைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 54). இவரது மனைவி ஜூலியட் மெர்சி ஞானகுமாரி (44). இவர்களுக்கு ஜெனத் ஸ்வீட்டி (13), மரியம் (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேரும் உத்தமபாளையம் பகுதியில்நடந்த உறவினர் வீட்டு விஷேசத்துக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    பழனிசெட்டிபட்டி அருகே பாதாள சாக்கடை பணிக்காக மண் மற்றும் ஜல்லிக்கற்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் மீது மோட்டார் சைக்கிள் சென்ற போது தவறி 4 பேரும் கீழே விழுந்தனர்.

    அப்போது பின்னால் வந்த லாரி ஜூலியட் மெர்சி ஞானகுமார் மற்றும் ஜெனத் ஸ்வீட்டி ஆகியோர் மீது ஏறியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான வத்தலக்குண்டு சேவுகம் பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×