search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாயை அடித்து கொன்ற தொழிலாளி கைது
    X

    நாயை அடித்து கொன்ற தொழிலாளி கைது

    சென்னை நங்கநல்லூரில் ஓடஓட விரட்டி குரைத்ததால் ஆத்திரம் அடைத்து நாயை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை நங்கநல்லூர் ரகுபதி தெருவை சேர்ந்தவர் ராஜா (48). கூலி தொழிலாளி. நேற்று இரவு மது அருந்தி விட்டு அங்குள்ள சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு நின்ற நாய் ஒன்று அவரை பார்த்து குரைத்தது. அவர் விரட்டினார். ஆனால் அந்த நாய் அவரை விடவில்லை. தொடர்ந்து பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. அவர் சத்தம்போட்டு விரட்டினாலும் போகவில்லை.

    நாய் ஆக்ரோசமாக ராஜாவைவிடாமல் குரைத்ததால் ஆத்திரம் அடைந்தார். அருகில் கிடந்த கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் நாய் சுருண்டு விழுந்து இறந்தது.

    இதுபற்றி புளூகிராஸ் அமைப்புக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். பழவந்தாங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நாயை அடித்து கொன்றதாக ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×