search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு- வாலிபர் கைது
    X

    திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு- வாலிபர் கைது

    திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் லதா (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவா (23) என்பவரை ஓராண்டாக காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் சிவா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லதாவை கற்பழித்து விட்டாராம்.

    இதையடுத்து லதா திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளார். ஆனால் சிவா, அவரது தாயார் வெண்ணிலா மற்றும் உறவினர் ராஜா தூண்டுதலின் பேரில் திருமணத்திற்கு மறுத்து விட்டார்.

    இது தொடர்பாக லதா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து தீவிர விசரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மதுரை வளங்கன் குளத்தைச் சேர்ந்த பழனி மகள் சின்னபாண்டியம்மாள் (வயது 17). இவரை செல்லம் பட்டியைச் சேர்ந்த பிரபு (24) என்பவர் காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண ஆசை வார்த்தை கூறி சின்ன பாண்டியம்மாளை கடத்திச் சென்று விட்டார். இது தொடர்பாக பழனி சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பிரபு, காதலி சின்ன பாண்டியம்மாளை போலீசிடம் ஒப்படைத்தார்.

    இந்த நிலையில் பழனி சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த பிரபு, பழனியை தாக்கிவிட்டு சின்ன பாண்டியம்மாளை மீண்டும் கடத்திச் சென்று விட்டார். இது தொடர்பாக பழனி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×