என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு- வாலிபர் கைது
மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் லதா (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவா (23) என்பவரை ஓராண்டாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில் சிவா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லதாவை கற்பழித்து விட்டாராம்.
இதையடுத்து லதா திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளார். ஆனால் சிவா, அவரது தாயார் வெண்ணிலா மற்றும் உறவினர் ராஜா தூண்டுதலின் பேரில் திருமணத்திற்கு மறுத்து விட்டார்.
இது தொடர்பாக லதா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து தீவிர விசரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மதுரை வளங்கன் குளத்தைச் சேர்ந்த பழனி மகள் சின்னபாண்டியம்மாள் (வயது 17). இவரை செல்லம் பட்டியைச் சேர்ந்த பிரபு (24) என்பவர் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண ஆசை வார்த்தை கூறி சின்ன பாண்டியம்மாளை கடத்திச் சென்று விட்டார். இது தொடர்பாக பழனி சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பிரபு, காதலி சின்ன பாண்டியம்மாளை போலீசிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் பழனி சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த பிரபு, பழனியை தாக்கிவிட்டு சின்ன பாண்டியம்மாளை மீண்டும் கடத்திச் சென்று விட்டார். இது தொடர்பாக பழனி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்