என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேச்சேரி அருகே ஆயுத பூஜை கொண்டாடியபோது மின்னல் தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்19 Oct 2018 4:34 AM GMT (Updated: 19 Oct 2018 4:34 AM GMT)
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே ஆயுத பூஜை கொண்டாடியபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 42).
இவர் நேற்று வீட்டில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள மோட்டார் அறையில் பூஜை செய்ய சென்றார். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மோட்டாருக்கு சந்தன பொட்டு வைத்துக் கொண்டிருந்த போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த முருகேசனுக்கு பூங்கொடி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 42).
இவர் நேற்று வீட்டில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள மோட்டார் அறையில் பூஜை செய்ய சென்றார். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மோட்டாருக்கு சந்தன பொட்டு வைத்துக் கொண்டிருந்த போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த முருகேசனுக்கு பூங்கொடி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X