search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே ஸ்டூடியோ கடை உரிமையாளர் தற்கொலை
    X

    திருச்சி அருகே ஸ்டூடியோ கடை உரிமையாளர் தற்கொலை

    திருச்சி அருகே ஸ்டூடியோ கடை உரிமையாளர் குளிர்பானத்துடன் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சோமரசம்பேட்டை:

    சோமரசம்பேட்டை அடுத்த கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது44). இவர் அல்லித்துறையில் ஸ்டூடியோ கடை வைத்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், யுவன்சங்கர்ராஜா, சந்தியா என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த ஒருவருட காலமாக மனஅழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இருப்பினும் கடந்த சில நாட்களாக அதிக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள வாய்க்கால் கரைக்கு சென்றார். அங்கு சென்றவர் குளிர்பானத்துடன் விஷத்தை கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.அந்த வழியாக சென்றவர்கள் அவருடைய வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×