என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் 5 பவுன் சங்கிலி - பணம் திருட்டு
Byமாலை மலர்17 Oct 2018 4:03 PM GMT (Updated: 17 Oct 2018 4:03 PM GMT)
திருவெறும்பூரில், ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் 5 பவுன் சங்கிலி மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:
தஞ்சாவூரை சேர்ந்தவர் அல்போன்சா (வயது40). இவர் திருச்சியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். அல்போன்சா திருச்சியில் இருந்து நேற்று இரவு 7 மணிக்கு தஞ்சாவூருக்கு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்.2 பெட்டியில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்தார். அந்த ரெயில் இரவு 7.30 மணி அளவில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது.
அப்போது மர்மநபர் ஒருவர், ரெயிலில் ஏறி அல்போன்சாவின் கைப்பையை பறித்துவிட்டு நடைமேடையில் குதித்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், திருடன்... திருடன்... என சத்தமிட்டபடியே அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால், ரெயில் சிறிது தூரம் தள்ளி நின்றது/ அதற்குள் மர்மநபர் தப்பி ஓடி விட்டதால் அவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. அந்த கைப்பையில் 5 பவுன் சங்கிலி மற்றும் ரூ.8 ஆயிரம், ஒரு செல்போன் வைத்திருந்தார்.
இந்த திருட்டு குறித்து தஞ்சாவூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சக பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் அல்போன்சாவிடம் அறிவுறுத்தினர். ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் மர்ம நபர் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் சக பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூரை சேர்ந்தவர் அல்போன்சா (வயது40). இவர் திருச்சியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். அல்போன்சா திருச்சியில் இருந்து நேற்று இரவு 7 மணிக்கு தஞ்சாவூருக்கு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்.2 பெட்டியில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்தார். அந்த ரெயில் இரவு 7.30 மணி அளவில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது.
அப்போது மர்மநபர் ஒருவர், ரெயிலில் ஏறி அல்போன்சாவின் கைப்பையை பறித்துவிட்டு நடைமேடையில் குதித்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், திருடன்... திருடன்... என சத்தமிட்டபடியே அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால், ரெயில் சிறிது தூரம் தள்ளி நின்றது/ அதற்குள் மர்மநபர் தப்பி ஓடி விட்டதால் அவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. அந்த கைப்பையில் 5 பவுன் சங்கிலி மற்றும் ரூ.8 ஆயிரம், ஒரு செல்போன் வைத்திருந்தார்.
இந்த திருட்டு குறித்து தஞ்சாவூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சக பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் அல்போன்சாவிடம் அறிவுறுத்தினர். ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் மர்ம நபர் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் சக பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X