என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாகூரில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்- ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
பாகூர்:
பாகூர் பங்களா வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 39). இவர் பாகூர் சிவன் கோவில் அருகே இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடை பக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜி (35) ஆட்டோ டிரைவர். இவரது அக்கா பூக்கடை வைத்திருக்கிறார்.
இதனால் பாபுவுக்கும், ராஜியின் அக்காவுக்கும் இட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று பாபு சிவன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜி பீர்பாட்டிலால் பாபுவின் தலையில் அடித்தார். இதில் தலையில் காயம் அடைந்த பாபு பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பாபுவை ராஜி தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டலும் விடுத்தார்.
பின்னர் இது குறித்து பாபு பாகூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜியை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்