search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    47-வது ஆண்டு தொடக்க விழா - கோவையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    47-வது ஆண்டு தொடக்க விழா - கோவையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா கோவையில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    கோவை:

    கோவை மாநகரில் அ.தி.மு.க. சார்பில் 47-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், ஓ.கே. சின்னராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.ராஜூ, சிங்கை முத்து, முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், பகுதி செயலாளர்கள் வக்கீல் விமல் சோமு, செல்வக்குமார், வெள்ளியங்கிரி, வக்கீல் பிரிவு செயலாளர் ஆறுமுகம், புரட்சித் தம்பி, சிங்கை பாலன், பழையூர் மோகன், ஆதிநாராயணன், மணல்பாரதி, லாலிரோடு ராதா, பிரபாகரன், காலனி ராஜ்குமார், வெள்ளலூர் பாலகிருஷ்ணன், சால்ட் வெள்ளியங்கிரி, சிங்கை ரங்கநாதன், பீளமேடு துரைசாமி, மாரப்பன், சாரமேடு பெருமாள், காட்டூர் செல்வராஜ், ஆர்.பி. பங்கஜ், துரைசாமி, எம்.பி. பாண்டியன், ஏ.பி.கே. சரவணன், கமலஹாசன் பால முரளி, கமலக்கண்ணன், பப்பாய் ராஜேஷ், வக்கீல்கள் பாலகிருஷ்ணன், ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல் பிரிவு சார்பில் கோர்ட் முன்பு 47- வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், தாமோதரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் வக்கீல்கள் பாலகிருஷ்ணன், எஸ்.பி. சந்திரசேகர், ராஜசேகர், கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, ஆர்.எஸ். மாதவன், ரங்கராஜன், ராமச்சந்திரன், சண்முக சுந்தரம், அண்ணா தொழிற்சங்க நா.கருப்பு சாமி, சிங்கை வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×