என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் மளிகை கடை குடோனில் பதுக்கிய 1 டன் பான்மசாலா பறிமுதல்- கடை உரிமையாளர் கைது
Byமாலை மலர்17 Oct 2018 9:03 AM GMT (Updated: 17 Oct 2018 9:03 AM GMT)
திருப்பூரில் மளிகை கடை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் கைதானார்.
திருப்பூர்:
திருப்பூரில் பான்மசலா பதுக்கிய மளிகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் குட்கா விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் மனோகரன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூர் தாராபுரம் சாலையில் குப்புசாமிபுரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரசுராம் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் 500 கிலோ பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருப்பூர் ஏ.பி.டி. சாலை, தென்னம் பாளையம் டாஸ்மாக் மதுக்கடை அருகே சுயம்புலிங்கம் மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
கடையின் பின்பக்கம் உள்ள குடோனில் சோதனை செய்த போது மூட்டை, மூட்டையாக குட்கா உள்ளிட்ட 1 டன் பான்மசாலா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு அறையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 2.5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளையும் கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக மளிகை கடை உரிமையாளர் வெள்ளியங்காடு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த லிங்கம் (47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூரில் பான்மசலா பதுக்கிய மளிகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் குட்கா விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் மனோகரன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூர் தாராபுரம் சாலையில் குப்புசாமிபுரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரசுராம் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் 500 கிலோ பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருப்பூர் ஏ.பி.டி. சாலை, தென்னம் பாளையம் டாஸ்மாக் மதுக்கடை அருகே சுயம்புலிங்கம் மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
கடையின் பின்பக்கம் உள்ள குடோனில் சோதனை செய்த போது மூட்டை, மூட்டையாக குட்கா உள்ளிட்ட 1 டன் பான்மசாலா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு அறையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 2.5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளையும் கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக மளிகை கடை உரிமையாளர் வெள்ளியங்காடு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த லிங்கம் (47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X