search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலையூரில் கஞ்சா வைத்திருந்த 5 மாணவர்கள் கைது
    X

    சேலையூரில் கஞ்சா வைத்திருந்த 5 மாணவர்கள் கைது

    சேலையூரில் கஞ்சா வைத்திருந்ததாக 5 கல்லூரி மாணவர்கள் கைது ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிக்கரணை:

    சேலையூர், நியூபாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் தங்கி இருந்த வாலிபர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தது.

    அந்த வீட்டில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினார்கள். அங்கு தங்கி இருந்த 5 பேர் கஞ்சா போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, கஞ்சா வைத்திருந்ததாக யோகேஷ், மெல்வின், ராஜு, கிருஷ்ணன், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர் என்ஜினீயரிங் மாணவர்கள். ஒருவர் கலைக்கல்லூரி மாணவர்.

    இவர்கள் அனைவரும் இந்த வீட்டில் தங்கி இருந்து அருகில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்தனர். கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் கைது ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×