search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே வேலை பார்த்த கடையில் மளிகை சாமான்களை திருடி விற்றவர்கள் கைது
    X

    மதுரை அருகே வேலை பார்த்த கடையில் மளிகை சாமான்களை திருடி விற்றவர்கள் கைது

    வேலை பார்த்த கடையிலேயே மளிகை சாமான்களை திருடி விற்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை கீழமாசி வீதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 51). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் செல்லூரைச் சேர்ந்த குமரவேல்பாண்டி (45), நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிமாறன் (50) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    சில மாதங்களாக கடையில் இருந்த பலசரக்கு சாமான்கள் குறைந்து வந்தது. இதனால் ராஜபாண்டிக்கு சந்தேகம் எழுந்தது. அவர் விசாரித்தபோது, கடையில் வேலை பார்த்த குமாரவேல் பாண்டி, மணிமாறன் ஆகியோர் 95 கிலோ மளிகை சாமான்களை திருடி வெளியில் விற்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேல்பாண்டி, மணிமாறனை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 5 கிலோ மளிகை சாமான்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×