search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் நகை வாங்குவது போல் நடித்து 7 பவுன் திருட்டு
    X

    மதுரையில் நகை வாங்குவது போல் நடித்து 7 பவுன் திருட்டு

    மதுரையில் நகை வாங்குவது போல் நடித்து நகை கடையில் 7 பவுன் நகையை திருடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற நகை கடைக்கு நேற்று காலை நகை வாங்க 2 பெண்கள் வந்தனர். அவர்கள் ஊழியர்களிடம் பல்வேறு டிசைன்களில் நகைகளை கேட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடையில் இருந்த அவர்கள் நகை எதுவும் வாங்காமல் சென்றனர்.

    அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் நகைகளை ஆய்வு செய்தபோது 7 1/2 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்தபோது நகை வாங்க வந்த 2 பெண்கள் 7 1/2 பவுனை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து நகை கடை மேலாளர் சவுந்தரபாண்டி கொடுத்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய பெண்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×