search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு
    X

    மதுரையில் பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

    மதுரையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலுசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை புதூர் அருகே உள்ள பரசுராம் பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி சாந்தி (வயது 51). இவர் சம்பவத்தன்று மாலை அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென மர்ம நபர்கள் சாந்தியை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரை கரிமேடு பாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் அருண் ஜெகநாதன் (52). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த ரூ.10,500-யை திருடிக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×