search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. இரவு வரை நீடித்த இந்த மழையால் ராமநாதபுரம் நகரின் சாலையில் மழை நீர் குழம்போல் தேங்கியது. சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

    இதேபோல் பரமக்குடி, மண்டபம், உச்சிப்புளி, கமுதி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதோடு விவசாயத்துக்காக வைகையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வறட்சி மாவட்டமாக அறியப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரமாக விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால் குடிநீர் பிரச் சினை தீரும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மில்லிமிட்டரில் வருமாறு:-

    கமுதி -18.40, முதுகுளத்தூர் -6.20, பாம்பன் -1.40, பரமக்குடி -5.20, பள்ளமோர்குளம்-4.50, வாலிநோக்கம் -1.60 மாவட்டத்தின் மொத்த மழையின் அளவு 143.70 மில்லிமிட்டர் ஆகும்.

    Next Story
    ×