search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணி அருகே காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 கொத்தனார் கைது
    X

    ஆரணி அருகே காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 கொத்தனார் கைது

    ஆரணி அருகே காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 கொத்தனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அத்திக்குளம் தெருவை சேர்ந்தவர் சேஷாத்திரி கட்டிட காண்டிராக்டர். இவரிடம் இந்த பகுதியை சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம் மணி, ராஜா அரி ஆகிய கொத்தனார்களை வேலைக்கு வரவேண்டாம் என்று சேஷாத்திரி கூறி விட்டார். இந்த நிலையில் மணி,ராஜா,அரி ஆகிய 3 பேரும் அரிவாளுடன் வந்து சேஷாத்திரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ராஜா,அரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மணியை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×