என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியங்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி
Byமாலை மலர்17 Oct 2018 5:00 AM GMT (Updated: 17 Oct 2018 5:00 AM GMT)
புளியங்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43). இவரது தாய் கிருஷ்ணம்மாள் (64). இவர் நேற்று மாலை அய்யாபுரம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று மதியம் முதலே புளியங்குடி சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து விளைநிலத்தில் இருந்த கிருஷ்ணம்மாள் மீது மின்னல் தாக்கியது.
இதில் அவர் முகம் கருகிய நிலையில் கீழே சாய்ந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43). இவரது தாய் கிருஷ்ணம்மாள் (64). இவர் நேற்று மாலை அய்யாபுரம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று மதியம் முதலே புளியங்குடி சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து விளைநிலத்தில் இருந்த கிருஷ்ணம்மாள் மீது மின்னல் தாக்கியது.
இதில் அவர் முகம் கருகிய நிலையில் கீழே சாய்ந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X