search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியங்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி
    X

    புளியங்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி

    புளியங்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43). இவரது தாய் கிருஷ்ணம்மாள் (64). இவர் நேற்று மாலை அய்யாபுரம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று மதியம் முதலே புளியங்குடி சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து விளைநிலத்தில் இருந்த கிருஷ்ணம்மாள் மீது மின்னல் தாக்கியது.

    இதில் அவர் முகம் கருகிய நிலையில் கீழே சாய்ந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×