என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 Oct 2018 4:36 PM GMT (Updated: 16 Oct 2018 4:36 PM GMT)
தஞ்சையில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சுப்பிரமணியன், இணைச்செயலாளர் ராமலிங்கம், வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளர் தரும.கருணாநிதி, துணைச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பொது வினியோகத்திட்டத்திற்கு என தனித்துறை அமைக்கப்படவேண்டும். கூட்டுறவுத்துறை, ரேஷன்கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்படவேண்டும். ரேஷன்கடைகளில் பணியாளர்களின் முன்பு கட்டுப்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் எடையிட்டு வழங்க வேண்டும்.
பயோமெட்ரிக் டிஜிட்டல் ரேஷன் கார்டு உள்ளிட்ட பொது வினியோகத்திட்டப்பணிகள் அனைத்தும் 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 762 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் 141 கடைகளில் உள்ள பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கடைகளில் தற்காலிக பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. #tamilnews
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சுப்பிரமணியன், இணைச்செயலாளர் ராமலிங்கம், வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளர் தரும.கருணாநிதி, துணைச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பொது வினியோகத்திட்டத்திற்கு என தனித்துறை அமைக்கப்படவேண்டும். கூட்டுறவுத்துறை, ரேஷன்கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்படவேண்டும். ரேஷன்கடைகளில் பணியாளர்களின் முன்பு கட்டுப்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் எடையிட்டு வழங்க வேண்டும்.
பயோமெட்ரிக் டிஜிட்டல் ரேஷன் கார்டு உள்ளிட்ட பொது வினியோகத்திட்டப்பணிகள் அனைத்தும் 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 762 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் 141 கடைகளில் உள்ள பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கடைகளில் தற்காலிக பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X