search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலாந்துறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    ஆலாந்துறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    ஆலாந்துறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள இழுவை கல்லை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் போலுவாம்பட்டி- செம்மேடு ரோட்டில் தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்தில் உள்ள மின்சார வேலியை தொட்டார். கண்இமைக்கும் நேரத்தில் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கு வீசியது. இதில் சம்பவஇடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி இறந்த விக்னேசின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×