search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்
    X

    தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்

    தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #SpecialTrain
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82627), நாளை(புதன்கிழமை) இரவு 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * நெல்லை-தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில்(82628), வரும் 20-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×